செய்திகள்
தற்கொலை

காவேரிபட்டணம் அருகே மகனுடன் தகராறு: மனமுடைந்த தாய் தற்கொலை

Published On 2019-08-27 13:01 GMT   |   Update On 2019-08-27 13:01 GMT
காவேரிபட்டணம் அருகே மகனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம், எர்ரஹள்ளி அருகே கவுண்டர்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மனைவி முனியம்மாள் (58). 

கூலித் தொழிலாளியான இவருக்கும், இவரது மகனுக்கும் நேற்றைய முன்தினம் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முனியம்மாளின் மகன்  தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதில் மனமுடைந்து காணப்பட்ட முனியம்மாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். 

இது குறித்து தகவலறிந்து வந்த காவேரிபட்டணம் போலீசார் முனியம்மாள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News