செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு
ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன்.இவரது மனைவி சந்திரா (வயது 60). நேற்றிரவு இவர் கோவிலுக்கு செல்வதற்காக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஆக்சிஸ் வங்கி எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டார்.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர்.