செய்திகள்
திருநகரில் தனியார் ஆஸ்பத்திரி நர்சு வீட்டில் நகை-பணம் கொள்ளை
திருநகரில் நர்சு வீட்டில் நகை-பணம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை, திருநகர், திருக்குமரன் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மனைவி ரேவதி (வயது 31). இவர் திருநகர் 2-வது பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று ரேவதி வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 11 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம், வாட்சு ஆகியவை திருடு போயிருந்தது.
இது குறித்து ரேவதி, திருநகர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ரேவதியின் வீட்டில் அக்கம், பக்கத்தைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி வந்து செல்வார்கள் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களில் யாரேனும் நகை-பணத்தை திருடிச் சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
மதுரை, திருநகர், திருக்குமரன் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மனைவி ரேவதி (வயது 31). இவர் திருநகர் 2-வது பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று ரேவதி வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 11 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம், வாட்சு ஆகியவை திருடு போயிருந்தது.
இது குறித்து ரேவதி, திருநகர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ரேவதியின் வீட்டில் அக்கம், பக்கத்தைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி வந்து செல்வார்கள் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களில் யாரேனும் நகை-பணத்தை திருடிச் சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.