செய்திகள்
நகை பறிப்பு

நாசரேத்தில் பெண்ணின் கையை வெட்டி நகை பறிப்பு

Published On 2019-08-19 07:30 GMT   |   Update On 2019-08-19 07:30 GMT
நாசரேத்தில் பெண்ணின் கையை வெட்டி நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாசரேத்:

நாசரேத் பிரகாசபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் மாயாண்டி(வயது 48), ஊட்டி கோத்தகிரியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பொன்மணி(39). இவர்களுக்கு சதிஷ்குமார்(17), சுரேஷ்குமார்(15) என இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் சதிஷ் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்திலும், சுரேஷ்குமார் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை குப்பை கொட்டுவதற்காக வீட்டின் முன் பகுதிக்கு பொன்மணி வந்துள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில்ள 2 பேர் வந்தனர். அவர்கள் பொன்மனியை கூப்பிட்டதும் அவர் திரும்பி பார்த்துள்ளார்.

அப்போது கையில் இருந்த அரிவாளை காட்டி மிரட்டி செயினை கொடுக்குமாறு கேட்டனர். அதற்கு பொன்மணி எதிர்ப்பு தெரிவித்ததும் அரிவாளால் கையில் வெட்டிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 ½ பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதில் கையில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் டி.எஸ்.பி. பால்துரை, நாசரேத் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் செயினை பறித்து சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News