செய்திகள்
கைது

சாத்தான்குளத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- தந்தை கைது

Published On 2019-08-18 17:13 GMT   |   Update On 2019-08-18 17:13 GMT
சாத்தான்குளத்தில் பெண்ணிடம் சிரித்து பேசி வாலிபரை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டார்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் தச்சைமொழி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது56). இவரது மனைவி சமுத்திரக்கனி (50). இவர்களது மகன் முருகன் (27). தந்தை-மகன் இருவரும் பள்ளிவாசல் தெருவில் உள்ள ஞானராஜ் என்பவரது இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்றிரவு அவர்கள் இருவரும் கடையில் இருந்தனர். 

அப்போது உறவினரான சங்கரம்மாள் என்பவர் அங்கு வந்துள்ளார். அவரிடம் முருகன் சிரித்து பேசியதாக தெரிகிறது. இதற்கு ஆறுமுகம் தனது மகன் முருகனை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவர் சங்கரம்மாளிடம் பேசி கொண்டிருந்தார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், தனது மகனை கத்தியால் வயிற்றில் குத்தினார். 

இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு உடனடியாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முருகனின் தாய் சமுத்திரக்கனி சாத்தான் குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
Tags:    

Similar News