செய்திகள்
விபத்து

பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம்

Published On 2019-08-17 10:15 GMT   |   Update On 2019-08-17 10:15 GMT
பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை நேரு நகரில் வசித்து வருபவர் முகமது இஸ்மாயில் (வயது 37).

சம்பவத்தன்று இவர் பாபநாசம் திருப்பாலைத்துறை மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த போது எதிரே வந்த கதிராமங்கலம் குமார் (47) என்பவர் ஓட்டி வந்த கார் மோதி படுகாயமடைந்தார். முகமது இஸ்மாயில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பாபநாசம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தார்.

இதேபோல் பாபநாசம் பெரியார் காலனியை சேர்ந்தவர் சேட்டு என்கிற ரவி (48), இவர் மோட்டார் சைக்கிளில் பாபநாசம்-சாலியமங்கலம் மெயின்ரோட்டில் வந்த போது பெருமாங்குடியை சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார். ரவி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து பாபநாசம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News