செய்திகள்
கோவை அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலி
கோவை அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை அருகே உள்ள பெரிய குயிலி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது47). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் ஒரட்டுகுப்பை-தெங்கனி ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மொபட் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.