செய்திகள்
விபத்து

அய்யலூர் அருகே தறிகெட்டு ஓடிய மில் வேன் மோதி வியாபாரி பலி

Published On 2019-08-14 09:50 GMT   |   Update On 2019-08-14 09:50 GMT
அய்யலூர் அருகே தறி கெட்டு ஓடிய மில் வேன் மோதி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50). மளிகை கடை வைத்துள்ளார். இவரும் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 54) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்சி சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.

கடவூர் பிரிவு அருகே சென்ற போது எதிரே 30-க்கும் மேற்பட்ட மில் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன் பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். மாரியப்பன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்து நடந்ததும் வேனில் வந்த பெண்களை நடுரோட்டில் இறக்கி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து தகவல் அறிந்து வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய டிரைவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News