செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

கும்மிடிப்பூண்டி அருகே ஆசிரியர் வீட்டில் கொள்ளை

Published On 2019-08-14 07:51 GMT   |   Update On 2019-08-14 07:51 GMT
கும்மிடிப்பூண்டி அருகே ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த சாமிரெட்டி கண்டிகையில் வசித்து வருபவர் ராஜூ. தனியார் ஐ.டி.ஐ.யில் ஆசிரியராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மாதம் ஆகிறது. கடந்த 12-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். இன்று காலை திரும்பி வந்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 35 பவுன் நகை, அரைக்கிலோ வெள்ளி, பட்டுப்புடவைகளை கொள்ளையர்கள் சுருட்டி சென்று இருப்பது தெரிந்தது.

Tags:    

Similar News