செய்திகள்
கைது

மதுரையில் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் சிக்கினார்

Published On 2019-08-12 10:16 GMT   |   Update On 2019-08-12 10:16 GMT
மதுரையில் ரூ.100, 50 கள்ள நோட்டுகளுடன் வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:

மதுரை ஆத்திகுளம் புதுநத்தம் ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் சரவணன் (வயது32) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இவர் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு இருந்தபோது ஏஞ்சல்நகரைச் சேர்ந்த பிரசன்னா (27) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் ரூ.50 கொடுத்து பெட்ரோல் போடும்படி கூறினார்.

அந்த ரூபாய் நோட்டு மீது சரவணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சக ஊழியர்களிடம் காண்பித்தபோது அது கள்ளநோட்டு என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பிரசன்னாவை சுற்றி வளைத்து பிடித்து தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பிரசன்னாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அவரிடம் இருந்து 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 9, 50 ரூபாய் கள்ளநோட்டு 3 மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரசன்னாவை கைது செய்து கள்ள ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்தது யார்? எங்கிருந்து வாங்கப்பட்டது? இதற்கு முன்பு மதுரையில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News