செய்திகள்
தற்கொலை

ஊத்தங்கரை அருகே தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2019-08-01 13:15 GMT   |   Update On 2019-08-01 13:15 GMT
ஊத்தங்கரை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள சென்னப்பநாயக்கனூர் பகுதுயை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி நதியா (வயது20). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 2 1/2 வருடம் ஆகியுள்ளது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட நதியா நேற்று தூக்குபோட்டு தற் கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த  நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்த நதியாவுக்கு திருமணமாகி 2 1/2 வருடம் ஆவதால் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டிஓ. தெய்வநாயகி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News