செய்திகள்
தற்கொலை

கொடைக்கானலில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

Published On 2019-07-29 10:21 GMT   |   Update On 2019-07-29 10:21 GMT
கொடைக்கானலில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார் அளித்துள்ளார்.

வத்தலக்குண்டு:

கொடைக்கானல் மாப்பிள்ளை முதலியார்புரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சொந்தமாக வாகனங்கள் வைத்து ஓட்டி வருகிறார். இவரும் மேல்மலை கிராமமான பூலூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா (வயது 28) என்பவரும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் சங்கீதா தனது தந்தை விஸ்வநாதனிடம் இது குறித்து கூறி அழுது வந்தார். அவரை சமாதானம் செய்து தனது வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் சங்கீதா வி‌ஷம் குடித்து மயங்கி கிடப்பதாக செந்தில்குமார் தனது மாமனார் விஸ்வநாதனுக்கு போன் செய்துள்ளார். வத்தலக்குண்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சங்கீதா அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை விஸ்வநாதன் புகார் அளித்துள்ளார். தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் முறையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் திருமணம் ஆகி 6 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்துகிறார்.

Tags:    

Similar News