செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி

கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2019-07-28 14:57 GMT   |   Update On 2019-07-28 14:57 GMT
கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆணவ கொலைகளுக்கு எதிராக மத்திய-மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்:

கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆணவ கொலைகளுக்கு எதிராக மத்திய-மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்றக்கோரி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ஜெயராமன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன், செய்தி தொடர்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்லபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில், கரூர் மத்திய நகர செயலாளர் முரளி உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

இதில் கரூர் நகர செயலாளர் முரளி, வணிகர் அணி அமைப்பாளர் கண்மணி ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் தனபால், மாவட்ட பொருளாளர் அவிநாசி, மாணவரணி அமைப்பாளர் தீபக்குமார், தொண்டரணி அமைப்பாளர் ராஜா, இனாம்கரூர் நகர செயலாளர் அருள், தான்தோன்றி நகர செயலாளர் சக்திவேல்,

மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் அக்னி அகரமுத்து, பகலவன் பாஸ்கர் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, ஆணவ கொலைகளை கண்டித்து கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News