செய்திகள்
ராஜபாளையம் அருகே குடிபோதையில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி
ராஜபாளையம் அருகே குடிபோதையில் கிணற்றுக்குள் விழுந்த சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் முகேஷ் (வயது 21). சமையல் தொழிலாளி.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று இரவும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டின் வெளியே உள்ள கிணற்றின் சுற்றுச்சுவர் மேல் முகேஷ் படுத்திருந்தார்.
நள்ளிரவில் எதிர்பாராத விதமாக தூக்கத்தில் உருண்ட முகேஷ், கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனை யாரும் கவனிக்கவில்லை.
இன்று காலை குடும்பத்தினர் முகேசை தேடினர். அப்போதுதான் அவர் கிணற்றில் பிணமாக மிதப்பது தெரிய வந்தது. உடனடியாக உடல் மீட்கப்பட்டது.
இதுகுறித்து சேத்தூர் போலீசில் புகார் செய்யப் பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.