செய்திகள்
நகை பறிப்பு

தேனி அருகே பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்கள்

Published On 2019-07-27 11:19 GMT   |   Update On 2019-07-27 11:19 GMT
தேனி அருகே பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

போடி சீனிமுகமது நகர் போலீஸ் லைன் பின்புறம் வசித்து வருபவர் பாலு (வயது 56). இவர் தனது மனைவி செல்வியுடன் தேனி, போடி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர்களை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்வியின் கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மறைந்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாலு இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News