செய்திகள்
விபத்து

கிருமாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் 5 பேர் காயம்

Published On 2019-07-19 14:42 GMT   |   Update On 2019-07-19 14:42 GMT
கிருமாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.
பாகூர்:

கடலூர் அருகே பெரிய கங்கணாங்குப்பத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது31). தனியார் நிறுவன ஊழியர். நேற்று இவர் தனது மனைவி மற்றும் உறவினரின் 4 வயது குழந்தையான காரூண்யன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில்  முள்ளோடை-பரிக்கல்பட்டு ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது  இவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே கண்டமங்கலம் அருகே பள்ளிதென்னல் கிராமத்தை சேர்ந்த  கமலக்கண்ணன் என்பவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ரஞ்சித்குமார், குழந்தை காரூண்யன் மற்றும் கமலக் கண்ணன் அவருடன் வந்த அவரது மகன், மகள் உள்ளிட்ட 5 பேரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 5 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News