செய்திகள்
செல்போனில் பெண்ணிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்தவர் மீது வழக்கு
வில்லியனூர் அருகே செல்போனில் பெண்ணிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வில்லியனூர்:
புதுவை கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 30). பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இவர், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனைவியிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்தார்.
இதுபற்றி அந்த பெண் தனது கணவரிடம் கூறினார். முருகனை அவர் கண்டித்தார். ஆனாலும், முருகன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.
இதுபற்றி அந்த பெண் வில்லியனூர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் வழக்கு பதிவு செய்து முருகனை தேடி வருகிறார்.
புதுவை கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 30). பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இவர், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனைவியிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்தார்.
இதுபற்றி அந்த பெண் தனது கணவரிடம் கூறினார். முருகனை அவர் கண்டித்தார். ஆனாலும், முருகன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.
இதுபற்றி அந்த பெண் வில்லியனூர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் வழக்கு பதிவு செய்து முருகனை தேடி வருகிறார்.