செய்திகள்
படுகாயம்

தஞ்சை அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி விபத்து- வேன் டிரைவர் படுகாயம்

Published On 2019-07-16 10:41 GMT   |   Update On 2019-07-16 10:41 GMT
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வேன் டிரைவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:

தஞ்சை வெட்டுகாரத் தெருவை சேர்ந்த செங்கமளம் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது24). இவர் லோடு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் செங்கிப்பட்டியில் இருந்து தஞ்சை திருச்சி சாலையில் தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தார். வல்லம் அருகே உள்ள முன்னையம்பட்டி பிரிவு சாலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது பின்னால் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்த மணிகண்டன் படுகாயமடைந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News