செய்திகள்
நகை பறிப்பு

மதுரையில் 2 பெண்களை தாக்கி நகை பறிப்பு

Published On 2019-07-12 10:14 GMT   |   Update On 2019-07-12 10:14 GMT
மதுரையில் 2 பெண்களை தாக்கி 11 பவுன் தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதூர்:

மதுரை அய்யர் பங்களாவை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது36).

இவர் சம்பவத்தன்று மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். மாட்டுத்தாவணி அருகே சென்றபோது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்தனர். ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் திடீரென்று மர்மநபர்கள் சந்திரமோகன் மனைவியை தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்றனர்.

ஊமச்சிக்குளம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(53). சம்பவத்தன்று இவர் மனைவியுடன் அழகர் கோவில் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் நாகராஜ் மனைவியை கம்பியால் தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினர்.

இரு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News