செய்திகள்
கொலை

மதுரையில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை

Published On 2019-07-12 10:02 GMT   |   Update On 2019-07-12 10:02 GMT
மதுரையில் ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை முனிச்சாலையை சேர்ந்தவர் கணேசன் (வயது 36) ஆட்டோ டிரைவர். இவர் ஆட்டோவை நிறுத்தி விட்டு சவாரிக்காக காத்து நின்றார்.

அப்போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை சீர்படுத்தும் முயற்சியில் கணேசன் ஈடுபட்டார். அந்த சமயத்தில் அங்கு லோடு ஆட்டோ வந்தது.

அதனை நிறுத்தும்படி கணேசன் கூறினார். இது தொடர்பாக அவருக்கும் லோடு ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியனுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன் இரும்புக் கம்பியால் கணேசனை தாக்கினார். பலத்த காயம் அடைந்த கணேசன் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் இன்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News