செய்திகள்
நகை பறிப்பு

மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

Published On 2019-07-09 09:37 GMT   |   Update On 2019-07-09 09:37 GMT
மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

மதுரை:

மதுரை கூத்தியார்குண்டு கோட்டை தெருவைச் சேர்ந்தவர் அகிலா (வயது48). இவர் கணவர் கோபாலகிருஷ்ணனுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து 2 மர்ம வாலிபர்கள் வந்தனர்.

மதுரை-திருமங்கலம் ரோட்டில் வந்தபோது அகிலா கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிள் திருடர்கள் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசில் அகிலா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பத்ம ஸ்ரீதேவி வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றார்.

Tags:    

Similar News