செய்திகள்
காதல் ஜோடி

தர்மபுரி மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2019-07-08 14:18 GMT   |   Update On 2019-07-08 14:18 GMT
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தர்மபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் அபிநயா (வயது27). இவரும் அதே பகுதியை சேர்ந்த சம்பத் மகன் புகழேந்தி (25) என்பவரும் இன்று காலை தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பாப்பாரப்பட்டி அடுத்துள்ள சக்தி நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் ஆகிய நான், சம்பத் என்பவரின் மகன் புகழேந்தியை கடந்த 2 வருடமாக காதலித்து வந்தேன்.

இந்த நிலையில் எங்களது விருப்பத்தை வீட்டில் தெரிவித்த போது மறுப்பு தெரிவித்தனர். இந்த காரணத்தினால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். எங்களது பெற்றோரிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு தருமாறு கேட்டு கொள்கிறேன். 

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். 

இதனை தொடர்ந்து காதல் ஜோடி இருவரும் போலீஸ் சூப்பிரண்டு ராஜனிடம் மனுவை கொடுத்து, பாதுகாப்பு கோரி அங்கேயே தஞ்சமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
Tags:    

Similar News