செய்திகள்
மாதிரி படம்

ரே‌ஷன் கடை ஊழியர் மகன் மீது தாக்குதல்

Published On 2019-07-08 07:06 GMT   |   Update On 2019-07-08 07:06 GMT
ரே‌ஷன் கடை ஊழியர் மகன் மீது தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

புழல், விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ரே‌ஷன் பொருட்கள் வாக்குவதற்காக அங்குள்ள கடைக்கு சென்றார்.

அப்போது ரே‌ஷன் கடை திறக்கப்படவில்லை என்று தெரிகிறது. சிறிது நேரத்தில் ரே‌ஷன்கடை ஊழியர் ஜானகி என்பவர் தனது மகன் திவாகருடன் அங்கு வந்தார்.

கடை திறக்க தாமதம் ஏன் என்று கூறி சுரேஷ் தகராறில் ஈடுபட்டார். இதில் சுரேக்கும், திவாகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் திவாகரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

Tags:    

Similar News