செய்திகள்
கைது

தூத்துக்குடியில் முதியவர் கொலை- 2 வாலிபர்கள் கைது

Published On 2019-07-05 11:33 GMT   |   Update On 2019-07-05 11:33 GMT
தூத்துக்குடியில் வாக்குவாதத்தில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் செங்கோல்மணி நகரை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 70). இவர் தனது மனைவி மற்றும் மகன் ஜெனின்டனுடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று ஜெனின்டன் அவரது நண்பர்களான தருவைகுளம் 125 வீடு காலனியை சேர்ந்த பெருநாச்சியா மகன் பிரதீப்ராஜ்(30), செல்லதுரை மகன் கவாஸ்கர்(32), அவரது சகோதரர் குமார்(30) ஆகியோருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

பின்னர் ஜெனின்டன் அவரது வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார். இந்நிலையில் இரவு ஜெனின்டன் வீட்டிற்கு நண்பர்கள் 3 பேரும் வந்தனர். அங்கு வைத்து அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்துக் கொண்டிருந்த பால்ராஜ் அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

ஆனால், ஆத்திரத்தில் இருந்த மூவரும் பால்ராஜை தள்ளி விட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தருவைகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரதீப்ராஜ், கவாஸ்கர் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News