செய்திகள்
தற்கொலை (கோப்பு படம்)

படிப்பை தொடர முடியாததால் தஞ்சை கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-07-02 17:07 GMT   |   Update On 2019-07-02 17:07 GMT
தஞ்சை அருகே படிப்பை தொடர முடியாததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை கோரி குளம் துளசிராமன் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மகள் கீர்த்திகா (18). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி திறக்கப்பட்டது. ஆனால் போதிய வருமானம் இல்லாததாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் கீர்த்திகாவை பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு தொடர ரமேசால் கல்லூரிக்கு அனுப்ப முடியவில்லை. இதை அவர் தனது மகளிடம் கூறினார்.

இதைக் கேட்டு கீர்த்திகா மிகுந்த மனவேதனை அடைந்தார். ஏழ்மை காரணமாக தன்னால் மேல்படிப்பு படிக்க முடியவில்லையே என மனமுடைந்த அவர் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கீர்த்திகா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தாய் ஜெயலட்சுமி தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News