செய்திகள்
கைது

பெண்ணை நிர்வாணமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது

Published On 2019-07-01 12:17 GMT   |   Update On 2019-07-01 12:17 GMT
திருவண்ணாமலை அருகே பெண்ணை நிர்வாணமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை பள்ளிகொண்டாப்பட்டு சம்பந்தனூர் பகுதியை சேர்ந்தவர் நரேந்திரன் (37).இவர் 35 வயது மதிக்கதக்க பெண்ணிடம் தகாத முறையில நடக்க முயற்சித்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணின் புகைப்படத்தை நிர்வாணமாக இருப்பது போன்று சித்தரித்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

இதையறிந்த அந்த பெண், நரேந்திரனிடம் ஏன் இவ்வாறு செய்தாய் என கேட்டுள்ளார். அதற்கு நரேந்திரனும் அவரது மனைவி தனலட்சுமி இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேந்திரனை கைது செய்தனர். நரேந்திரன் மனைவி தனலட்சுமியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News