செய்திகள்
களக்காடு அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்- தொழிலாளி கைது
களக்காடு அருகே இடப்பிரச்சினை தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள தேவநல்லூர் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் தொழிலாளி நல்லக்கண்ணு. இவரது மனைவி கனி (வயது 47). நல்லக்கண்ணுக்கும் அதே ஊரை சேர்ந்த தொழிலாளி சுடலை (44) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று கனி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுடலை அவரை அரிவாளால் வெட்ட முயற்சி செய்தார். ஆனால் கனி தப்பி ஓடி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுடலை, கனிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்று விட்டார். இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லிவிபால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுடலையை கைது செய்தார்.