செய்திகள்

மன அழுத்தம் காரணமாக பட்டதாரி இளம்பெண் தற்கொலை

Published On 2019-06-24 10:01 GMT   |   Update On 2019-06-24 10:01 GMT
கோவை பீளமேடு அருகே மன அழுத்தம் காரணமாக பட்டதாரி இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் கீர்த்தனா (வயது 27). பி.டெக். பட்டதாரி.

இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த கீர்த்தனா வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கீர்த்தனாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News