செய்திகள்

காவேரிப்பட்டணம் அருகே சிறுமி கடத்தல்- வாலிபர் மீது புகார்

Published On 2019-06-19 16:20 GMT   |   Update On 2019-06-19 16:20 GMT
காவேரிப்பட்டணம் அருகே வீட்டை விட்டு சென்ற சிறுமியை வாலிபர் கடத்தி சென்றிருப்பது குறித்து அவரது பெற்றோர் போலீசார் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாப்பர்த்தி கிராமத்தை சேர்ந்த விவசாயியின் 17 வயது மகள் 10-ம் வகுப்பு படித்துவிட்டு, வீட்டில் இருந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், அதேபகுதியில் உள்ள குட்டிகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த வில்லியம்ஜோசப் என்பவரது மகன் விஜய் (எ) அந்தோணி (20) என்பவர், திருமணம் செய்யும் நோக்கத்தில் தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) பத்மாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News