செய்திகள்
டீசல் போட பின்னால் எடுத்த போது லாரி ஏறி தொழிலாளி உடல் நசுங்கி பலி
கோவை அருகே டீசல் போட பின்னால் எடுத்த போது எதிர்பாரத விதமாக தொழிலாளி மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
கோவை
ஒடிசாவை சேர்ந்தவர் ஹந்தா ஹரிஜன் (21). போர்வெல் லாரியில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். நேற்று மாலை இவர் வேலைப் பார்க்கும் போர் வெல் லாரியில் சரவணம் பட்டி பகுதிக்கு வந்தார்.
அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டிரைவர் லாரியை நிறுத்தினார். அப்போது ஹந்தா ஹரிஜன் லாரிக்கு கீழ் படுத்து தூங்கினார். இன்று அதிகாலை 3 மணி யளவில் டிரைவர் டீசல் போட லாரியை எடுத்தார். அப்போது ஹந்தா ஹரிஜன் லாரிக்கு கீழ் படுத்து இருந்ததை கவனிக்காத லாரிடிரைவர் லாரியை பின் பக்கமாக இயக்கினார். அப்போது ஹந்தா ஹரிஜன் மீது லாரி ஏறியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதுகுறித்து தெரியவந்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஒடிசாவை சேர்ந்தவர் ஹந்தா ஹரிஜன் (21). போர்வெல் லாரியில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். நேற்று மாலை இவர் வேலைப் பார்க்கும் போர் வெல் லாரியில் சரவணம் பட்டி பகுதிக்கு வந்தார்.
அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டிரைவர் லாரியை நிறுத்தினார். அப்போது ஹந்தா ஹரிஜன் லாரிக்கு கீழ் படுத்து தூங்கினார். இன்று அதிகாலை 3 மணி யளவில் டிரைவர் டீசல் போட லாரியை எடுத்தார். அப்போது ஹந்தா ஹரிஜன் லாரிக்கு கீழ் படுத்து இருந்ததை கவனிக்காத லாரிடிரைவர் லாரியை பின் பக்கமாக இயக்கினார். அப்போது ஹந்தா ஹரிஜன் மீது லாரி ஏறியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதுகுறித்து தெரியவந்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.