செய்திகள்
வடபழனி பாரில் மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேர் கைது
வடபழனி பாரில் மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
வடபழனி நெற்குன்றம் சாலையில் உள்ள பாரில் இரவு 11 மணி அளவில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பார் சூப்பர்வைசர் ரவிச்சந்திரன், ஊழியர் பழனிமுருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 228 குவாட்டர் பாட்டில்கள், 23 ஆப் பாட்டில்கள், 19 பீர் பாட்டில்கள், மற்றும் ரொக்கம் ரூ.790 ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.