search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடபழனி"

    • சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
    • விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை வடபழனியில் உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து விபத்துக்குள்ளானது.

    சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

    இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    காலை நேரத்தில், பரபரப்பாக இயங்கிக்கும் கொண்டிருக்கும் வடபழனி பகுதியில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும்.
    • முருகப் பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு.

    முருகப் பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும்,

    தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.

    முருகப்பெருமானைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டு மானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை,

    அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து,

    அதை நுணுக்கமாக ஆராய வேண்டும்.

    அப்போது தான் முருகன் யார் என்பது மிகத்தெளிவாக தெரியவரும்.

    பல கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும்.

    முருகன் அருள் பெற அறுபடை வீடுகளுடன் தொண்டை மண்டலத்தின் வைரக்கிரீடமாகத் திகழும் வடபழனி தலமும் உள்ளது.

    • வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
    • செவ்வாய் ஓரையில் வழிபடுவது சிறப்பு.

    வைத்தீஸ்வரன் கோவிலில், செவ்வாய் பகவானைத் தை மாத செவ்வாய்களிலும், குறிப்பாக தை மாத கடைசி செவ்வாயில், செவ்வாய் ஓரையில் வழிபடுவது சிறப்பாகும். மேலும் செவ்வாய் பகவான் உச்சம் பெறும் தை மாதம், ஆட்சி பெறும் சித்திரை, கார்த்திகை மாதங்களில், செவ்வாயின் நட்சத்திரகளாகிய மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் வரும் செவ்வாய் கிழமைகளில் வழிபடலாம்.

    செவ்வாய் ஓரையில் செவ்வாய்க்கிழமையில், செவ்வாய் ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரை இரவு 8 மணி முதல் 9 மணி வரை வழிபட்டு பரிகாரம் செய்வது மிக மிகச்சிறப்பாகும்.

    ஹோம பலன்

    உத்திராடம், உத்திரட்டாதி, உத்திரம்-இந்த நட்சத்திரங் களில் ஸ்ரீமகாலட்சுமியை ஆவாகானம் செய்து ஆயிரம் நந்தியாவட்டை மலர்களால் ஹோமம் செய்து ஐஸ்வர்யம் நிலையாய் இருக்கும் பெளர்ணமியில் பால், தேன் நெய், பழத்தை தோய்த்து ஹோமம் செய்ய அரசனாவான்.

    பஞ்சமி திதியிலும், வெள்ளிக்கிழமையிலும் வாசனை புஷ்பத்தால் ஹோமம் செய்ய ஒரு வருடத்திற்குள் அனைத்து சம்பத்துக்களையும் அடைந்து செல்வந்தனாவான்.

    விஷ்ணு பரிவார சக்திகளில் ஸ்ரீ மஹாலட்சுமி

    பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று புதிதாக இருக்கிறதல்லவா? அதில் இருப்பரிவார சக்திகள் சற்று வித்தியாசமாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    தகதகக்கும் தங்க நிறம் உடைய ஸ்ரீ தேவி, வெள்ளை நிறமுடைய பூமிதேவி, வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி, பச்சை நிற முடைய பரீதி தேவி, சிவப்பு நிறமுடைய கீர்த்தி தேவி, நிறமற்று ஸ்படிகம் போல ஊடுருவும் கண்ணாடித் தன்மையுள்ள சாந்தி தேவி, மஞ்சள் நிறமுடைய துஷ்டி தேவி, பச்சை நிறமுடைய புஷ்டி தேவி, என்பவர்களே அந்த விஷ்ணுசக்திகள்.

    இவர்கள் எண்மரும் நான்கு திருக்கரங்கள் கொண்டு அவற்றில் மேல் இரு திருக்க்கரங்களில் இரு தாமரை மலர்களும், கீழே வலது கரம் அபயகாஸ்தமாகவும் இடது கரம் வரத காஸ்தமாகவும் அபிநயம் புரியும்படி பரிவார சக்திகளாக அமைந்திருப்பார்கள்.

    வடபழனி

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. செவ்வாய் தோஷம் உடையவர்களும், செவ்வாய்க் கிரகத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இதனை வழிபட மிகச்சிறப்பான பலனைத்தரும்.

    செவ்வாய் தோஷம் நீங்கிட வடக்குவாசி என்று அழைக்கப்படும் ஸ்ரீதுர்க்கை அம்மன் தெற்கு நோக்கி இருக்கும் சங்கரன் கோவிலில் வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாக அமையும். மேலும் செவ்வாய் பகவானின் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் பழனி, சுவாமிமலை, நீங்கலாக மற்ற இடங்களில் உள்ள முருகப்பெருமாளை வழிபடுவது சிறப்பாகும்.

    செவ்வாய், கடகம், மகரம், மீனம் இவற்றில் அமர்ந்து தோஷம் ஏற்படுத்தினால் திருச்செந்தூர் முருகனை வழிபடுவது சிறப்பு. பொதுவாக செவ்வாய் பகவானால் திருமண தோஷம் அடைந்தவர்கள் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபடுவதே சிறப்பை தரும்.

    ×