செய்திகள்

பழனி அருகே வீடு புகுந்து நகை-பணம் திருட்டு

Published On 2019-06-15 08:37 GMT   |   Update On 2019-06-15 08:37 GMT
பழனி அருகே வீடு புகுந்து நகை பணம் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனி:

பழனி அருகே உள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்தவர் அன்ராஜ் (வயது 60). டிரைவர். இவருக்கு தமிழ்செல்வி (வயது 59) என்ற மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன், மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன்கள் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்கள்.

மகள் மட்டும் அன்ராஜ் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று அன்ராஜ் வேலைக்கு சென்று விட்டார். தமிழ்செல்வியும் அவரது மகளும் வீட்டில் இருந்தனர். மறுநாள் அனராஜ் வந்து பார்த்த போது வீட்டின் முன் பக்க கதவு திறந்து இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம், 12 பவுன் நகை ஆகியவை திருட்டு போய் இருந்தன. மர்ம நபர்கள் தமிழ்செல்வி மற்றும் அவரது மகள் தூங்கிய நேரம் பார்த்து வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது பற்றி பழனி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News