செய்திகள்

சேத்துப்பட்டில் நகை திருடிய கல்லூரி மாணவி கைது

Published On 2019-06-15 06:44 GMT   |   Update On 2019-06-15 06:44 GMT
சென்னை சேத்துப்பட்டில் 11 பவுன் நகை திருடிய கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை:

சேத்துப்பட்டில் தனம்மாள் தெருவில் குடியிருப்பவர் ஜெய்சிம்மவர்மன். உடற்பயிற்சி ஆசிரியர்.

இவருடைய வீட்டில் பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகை மாயமானது. இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஜெய்சிம்மன் புகார் செய்தார்.

திரிசூலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ரோஜா (24). என்பவர் ஜெய்சிம்மவர்மனின் மகனுடன் அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது ஜெய்வர்மனின் மகன் படிக்கும் கல்லூரியில் ரோஜா படிப்பதும் அந்த பழக்கத்தில் வீட்டுக்கு வந்தபோது பீரோவில் இருந்த நகையை திருடியதும் தெரிய வந்தது.

அவர் கொடுத்த தகவலின் படி அடகு கடையில் இருந்த 11 பவுன் நகை மீட்கப்பட்டது.

இதையடுத்து, மாணவி ரோஜாவை சேத்துப்பட்டு போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிபதி உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News