செய்திகள்

ராஜபாளையத்தில் பணத்தகராறில் 2 பெண்களுக்கு மிரட்டல்

Published On 2019-06-13 10:00 GMT   |   Update On 2019-06-13 10:00 GMT
ராஜபாளையத்தில் பணத்தகராறில் பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட புகார் தொடர்பாக தளவாய்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் கரடி மார் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமி (வயது 35). ராஜபாளையம் கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார்.

அதில், ஊஞ்சல் மண்டபம் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி பாக்கியலட்சுமி(35)யிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வாங்கினேன். இதற்கு வாரந்தோறும் ரூ.15 ஆயிரம் வட்டி செலுத்தி வந்தேன்.

இந்த நிலையில் தளவாய்புரம் பஸ் நிலையம் அருகே நடந்து சென்றபோது, பாக்கியலட்சுமி வழிமறித்து முழு தொகைகையும் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார் என குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ராஜபாளையம் ஆசிலாபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி(42)யிடம் அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து, அவரது மனைவி முருகலட்சுமி ஆகியோர் தனித்தனியே ரூ2 லட்சத்து 8 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார்.

இதற்கு 2016-ம் ஆண்டு வரை வட்டி கட்டிய நிலையில், தற்போது பணத்தை கொடுக்க மறுப்பதோடு, கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகேஸ்வரி ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News