செய்திகள்

ராயக்கோட்டை அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி

Published On 2019-06-12 16:44 GMT   |   Update On 2019-06-12 16:44 GMT
ராயக்கோட்டை அருகே அரசு பஸ் மோதி விவசாயி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தொட்ட திம்மனஅள்ளி ஊராட்சி திரு.வி.க. நகரைச் சேர்ந்த முனிராஜ் (வயது 35). விவசாயி. நேற்று இரவு 8 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து ராயக்கோட்டைக்கு வந்தார். அங்கு மளிகை சாமன்களை வாங்கி கொண்டு மீண்டும் அவர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். 

நெல்லூர் அருகே ஒரு வளைவில் திரும்பும் போது எதிரே தேன்கனிக்கோட்டையில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி காமாட்சி ராயக்கோட்டை போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த முனிராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்துபோன முனிராஜுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News