செய்திகள்

நெல்லை அருகே விஷம் குடித்த 2 பேர் உயிரிழப்பு

Published On 2019-06-09 15:46 GMT   |   Update On 2019-06-09 15:46 GMT
நெல்லை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவத்தில் விவசாயி மது குடித்து விட்டு வந்ததை உறவினர்கள் கண்டித்ததால் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த திருமலா புரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லையாம். இதனால் சம்பவத்தன்று அவர் விஷம் குடித்துவிட்டு திருமலாபுரம் அருகே உள்ள வயல்காட்டில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாளை சீவலப்பேரி அருகே உள்ள மேலபாலா மடை கிராமத்தை சேர்ந்தவர் பூதப்பாண்டி (58), விவசாயி. இவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் மனைவி மற்றும் உறவினர்கள் அவரை சத்தம் போட்டனர். இதில் மனமுடைந்த பூதப்பாண்டி சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்தார். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News