செய்திகள்

ஆரணி அருகே குடிநீர் கேட்டு மறியல்

Published On 2019-06-07 12:17 GMT   |   Update On 2019-06-07 12:17 GMT
குடிநீர் கேட்டு பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆரணி, தேவிகாபுரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

ஆரணி:

ஆரணி அருகே உள்ள வடகசாத்து பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு போர்வெல் மூலம் குடிநீர் வழங்கபட்டு வருகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த போர்வெல்லில் ஏற்பட்ட பழுதின் காரணமாக அப்பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கபடவில்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் கொண்டு வருகிற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆரணி - தேவிகாபுரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக போர்வெல்லை சரி செய்து குடிநீர் வழங்குமாறு பொதுமக்கள் ஆவேசத்துடன் கூறினர்.

சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News