செய்திகள்

ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2019-05-28 18:02 GMT   |   Update On 2019-05-28 18:02 GMT
ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் புது தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 74). இவர் அதே பகுதியில் உள்ள பஸ் நிலையம் முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கணேசன் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சொக்கநாதன் புத்தூரை சேர்ந்த யோகராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News