செய்திகள்

கோவை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

Published On 2019-05-20 10:24 GMT   |   Update On 2019-05-20 10:24 GMT
கோவை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாயவேல். இவரது மகன் விஜயகுமார் (வயது23). இவர் கே.ஜி. சாவடியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கோவை- பாலக்காடு ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News