செய்திகள்

ஊத்தங்கரையில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

Published On 2019-05-15 16:01 GMT   |   Update On 2019-05-15 16:01 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்னர்.
ஊத்தங்கரை:

ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்த செரிப் (31).நாராயணநகர் பகுதியை சேர்ந்த சண்முகம்( 54), செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (39), ஆகியோர் அரசு அனுமதியின்றி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனைசெய்து வந்துள்ளனர். 

தகவல் அறிந்து அப்பகுதியில் ரோந்துசென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அவர்கள் 3 பேரையும் பிடித்து வழக்குப்பதிவுசெய்து கைது செய்தார்.

மேலும் அவர்களிடம் இருந்து 109 லாட்டரி சீட்டு மற்றும் ரூ.300 பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றார்.
Tags:    

Similar News