செய்திகள்

சிறுவன் மர்ம மரணம் - தந்தை உள்பட 4 பேர் மீது வழக்கு

Published On 2019-05-14 12:50 GMT   |   Update On 2019-05-14 12:50 GMT
சுவாமிமலை அருகே சிறுவன் மர்மமான முறையில் பலியான சம்பவம் குறித்து அவரது தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:

சுவாமிமலையை அடுத்த திம்மக்குடியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது42) கொத்தனார். இவரது மனைவி சுபஸ்ரீ (38). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அபிஷேக் (வயது 5) என்ற மகன் இருந்தான்.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சுபஸ்ரீ வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அறிந்த கார்த்தி தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையே அபிஷேக் நேற்று முன்தினம் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டான். அவனை மீட்டு உறவினர்கள் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது அபிஷேக் உடலில் வி‌ஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவனை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலன் அளிக்காமல் அவன் நேற்று காலை பரிதாபமாக இறந்தான்.

இதுப்பற்றிய புகாரின் பேரின் சுவாமிமலைப் போலீசார் சிறுவனின் தந்தை கார்த்தி மற்றும் உறவினர்கள் கேசவன், பிரேமா, ஸ்ரீதர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News