செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் வேதனை - உடலில் மின்சாரம் பாய்ச்சி வாலிபர் தற்கொலை

Published On 2019-05-14 09:29 GMT   |   Update On 2019-05-14 09:29 GMT
மனைவி பிரிந்து சென்ற வேதனையில் வாலிபர் உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர்:

மணலி, திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் கோபால் (வயது26). இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வசந்தி குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டார். இதனால் கோபால் மனவேதனையில் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கோபாலின் வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்தது. இன்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மணலி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டு கதவை உடைத்து பார்த்த போது அங்குள்ள அறையில் கோபால் இறந்து கிடந்தார்.

அவரது உடலில் மின் வயர்கள் சுற்றப்பட்டு இருந்தது. மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அவர் தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News