செய்திகள்

நாகரசம்பட்டி அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2019-05-13 14:41 GMT   |   Update On 2019-05-13 14:41 GMT
நாகரசம்பட்டி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்திய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மினி வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நாகரசம்பட்டி பகுதியை அடுத்த ஏ.மோட்டூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கழுதைகள் மூலம் மர்ம நபர்கள் மணல் கடத்தி செல்வதாக பாரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு தென்பெண்ணையாற்றில் இருந்து கழுதைகள் மூலம் மணல் அள்ளி வந்து செந்தில் என்பவரது தென்னந்தோப்பில் குவித்து வைத்து மினிடோர் ஆட்டோவில் கடத்தி சென்றது தெரியவந்தது. 

உடனே போலீசார் மணல் கடத்தி செல்ல முயன்ற செந்திலையும், அதே பகுதியைச் சேர்ந்த முருகனையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மினிடோர் ஆட்டோவையும், 1  யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News