செய்திகள்

சென்னை துரைப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ரூ.1 கோடி பணம் பறிப்பு

Published On 2019-05-11 07:50 GMT   |   Update On 2019-05-11 07:50 GMT
சென்னை துரைப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் முகமது தாகிரிடம், புறம்போக்கு நிலம் தொடர்பாக சென்னை துரைப்பாக்கத்தில் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிரச்சினை முற்றிய நிலையில், கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் முகமது தாகிரை சரமாரியாக தாக்கி உள்ளனர். அவரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்களையும் பறித்துள்ளனர். இது தொடர்பாக முகமது  தாகிர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களை தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News