search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல் எஸ்டேட் அதிபர்"

    • பக்கத்து அறையில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது பாத்ரூமில் இறந்து கிடந்தார்.
    • போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    சென்னை வில்லிவாக்கம், என்.எம்.டி.ஹெச். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (61). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் வந்த இவர் பஸ் நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். மேலும் இங்கிருந்தபடியே ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை அவரது அறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பக்கத்து அறையில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது பாத்ரூமில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எவ்வாறு இறந்தார்? வழுக்கி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 7 பேர் கொண்டு கும்பல் விசாரணை என்ற அடிப்படையில் சஞ்சீவியை அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.
    • 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ.30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர்.

    கோவை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் டாலர் காலனியில் தங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    கடந்த 8-ந் தேதி சஞ்சீவி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள ஓட்டலில் தங்கி இருந்து நிலம் வாங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    10-ந் தேதி சஞ்சீவி அறையில் இருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை கேரளா மற்றும் மதுரையை சேர்ந்த போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் சஞ்சீவியிடம் நீங்கள் இரிடியத்தை மறைத்து வைத்து பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என கூறி அவரை மிரட்டினர். பின்னர் 7 பேர் கொண்டு கும்பல் விசாரணை என்ற அடிப்படையில் சஞ்சீவியை அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.

    இதனை தொடர்ந்து சஞ்சீவியை அவர்கள் கோவைக்கு கடத்தி வந்தனர். வரும் வழியில் அவரது டிரைவரை கரூரில் இறக்கி விட்டு வந்தனர். பின்னர் காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அப்போது 7 பேர் கொண்ட கும்பலுடன் கேரளாவை சேர்ந்த முக்கிய குற்றவாளியான சிபின் என்பவர் தான் கேரள போலீஸ் என கூறி அங்கு வந்தார். அவருடன் கிப்சன், அலெக்ஸ் ஆகியோரும் வந்து இருந்தனர்.

    இவர்கள் 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ.30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர். ஆனால் அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை கும்பல் பறித்து கொண்டனர். மேலும் அவர் அணிந்து இருந்த 16 பவுன் தங்க செயின், 10 பவுன் கைச் செயின், 4 பவுன் மோதிரம் உள்பட 30 பவுன் தங்க நகைகளை மிரட்டி பறித்தனர்.

    பின்னர் அந்த கும்பல் சஞ்சீவியை காரில் ஏற்றி சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள டோல்கேட் அருகே இறக்கி விட்டு ரூ.30 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து விட்டு அழைக்கவும் என கூறி விட்டு சென்றனர். இது குறித்து சஞ்சீவி காட்டூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் என கூறி மிரட்டி ரியஸ் எஸ்டேட் அதிபரை கடத்தி 8 நாட்கள் சிறை வைத்து மிரட்டி 30 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டனர்.
    • ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் மற்றும் அவரது தொழில் பங்குதாரர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் சுகந்தி. இவருக்கு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பாரதி நகரில் சொந்தமான வீடு உள்ளது.

    இவரது வீட்டை கோபிசெட்டி பாளையம் வடக்கு பார்க் வீதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் என்பவர் வாங்க விலை பேசினார். அதன்படி முன்பணமாக சுதர்சன் ரூ.15 லட்சம் கொடுத்து உள்ளார்.

    இந்த நிலையில் சுதர்சன் புதிதாக வாங்க இருக்கும் வீட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யவும், புதிய வீட்டிற்கு மீதி பணம் கொடுப்பதற்காகவும் 4 பேக்குகளில் ரூ.2.80 கோடியை ஒரு தனி அறையில் வைத்து பூட்டி சென்றார்.

    நேற்று மதியம் சுதர்சன் மீண்டும் புதிதாக வாங்க இருக்கும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 4 பேக்குகளில் இருந்த ரூ.2.80 கோடி பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுப்பற்றி கோபிசெட்டி பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

    மேலும் துப்பறியும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோபி செட்டிபாளையம் போலீசார் 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டனர். தனிப்படை போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் திருட்டு நடந்த வீட்டில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. போலீசார் அந்த கேமிராக்களை கைப்பற்றி ஆய்வு செய்த போது அவை செயல்படாதது என்று தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் இது தொடர்பாக பணத்தை வைத்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் மற்றும் அவரது தொழில் பங்குதாரர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இவ்வளவு பணம் வீட்டில் வைத்து இருக்கும் தகவல் சுதர்சனுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

    எனவே அவர்கள் யாராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விடிய,விடிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 14 பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார்.
    • ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த ராசு என்பவரது மகன் சந்திரன் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை கரட்டுப்பாளையம் புதூரை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி கலாராணி என்கிற கலாவதி (45) அணுகினார். அவர் தனக்கு ரூ. 10 லட்ச ரூபாய் அவசர தேவை இருப்பதாகவும், அதற்கு ஈடாக தன்னிடம் உள்ள 14 பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சந்திரன் சம்பவத்தன்று காலை கலாராணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே மேலும் 4 நபர்கள் இருந்துள்ளனர். அவர்கள் சந்திரனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மிரட்டி அவர் அணிந்திருந்த ஐந்தரைப்பவுன் தங்கச்செயின் மற்றும் சட்டை பையில் வைத்திருந்த ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் மாற்றி கொண்டனர். மேலும் அவரிடம் 6 பத்திர தாள்களில் கைரேகையை பதித்துக் கொண்ட அந்த கும்பல் அவரிடமிருந்து 3 வங்கி காசோலைகளையும் கையெழுத்திட்டு பெற்று கொண்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த சுமதி என்ற பெண்ணுடன் சந்திரனை அருகே அமர வைத்து போட்டோவும் எடுத்துள்ளனர்.

    அதன் பின்னர் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து சந்திரன் அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன்பின்னர் போலீஸ் நிலையம் வந்து புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து கலாராணி மற்றும் ஐயப்பன் என்பவரது மனைவி சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெருந்தொழுவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருச்சியில் நிலப்பத்திரம் பதிவு செய்து தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.95 லட்சம் மோசடி நடந்துள்ளது
    • மாநகர குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன், மோசடி செய்த தந்தை, மகனான லிங்கசேகர், ராஜேஸ்வர பாண்டியன் ஆகிய இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்

    திருச்சி:

    திருச்சி கே.சாத்தனூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 69). ரியல் எஸ்டேட் அதிபர்.

    இந்த நிலையில் ரேஸ் கோர்ஸ் ரோடு கேசவன் நகர் காஜாமியான் தெரு பகுதியைச் சேர்ந்த லிங்கசேகர் என்பவருக்கு ரேஸ் கோர்ஸ் சாலையில் 47 ஏக்கர் நிலம் இருப்பது தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து நாகராஜன் அவரிடம் சென்று அந்த நிலத்தை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஒரு ஏக்கருக்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் வீதம் 47 ஏக்கருக்கு ரூ.2 கோடியே 20 லட்சத்து 90 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நாகராஜன், லிங்க சேகருக்கு பல்வேறு தவணைகள் வாயிலாக வங்கி மூலமும், நேரிலும் ரூ.95 லட்சத்து ஆயிரம் கொடுத்தார்.

    அதன் பின்னர் அவரும் மகன் ராஜேஸ்வர பாண்டியனும் சேர்ந்து நிலத்தை பதிவு செய்ய முன்வராமல் இழுத்து அடித்தனர். அதைத்தொடர்ந்து கொடுத்த முன் பணத்தை திருப்பி நாகராஜன் கேட்டார்.

    ஆனால் நிலத்தையும் பத்திரப்பதிவு செய்யாமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் தந்தையும், மகனும் சேர்ந்து அவரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நாகராஜன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷன் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    அதன் அடிப்படையில் மாநகர குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன், லிங்கசேகர், ராஜேஸ்வர பாண்டியன் ஆகிய இருவர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். உதவி போலீஸ் கமிஷனர் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராஜேஷ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொண்டாமுத்தூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார்.
    • வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    கோவை

    பொள்ளாச்சி நேரு வீதியை சேர்ந்தவர் மணிகன்ட ராஜேஷ் (வயது 38). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது அலுவலகம் வீட்டின் அருகேயே உள்ளது.


    அங்கு உமா என்பவர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மணிகன்ட ராஜேஷ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொண்டாமுத்தூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார். அலுவலகத்தில் இருந்த உமா வேலைகளை முடித்து அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார்.

    மறுநாள் காலை வழக்கம்போல உமா வேலைக்கு வந்தார். அப்போது மணிகன்ட ராஜேசின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மணிகன்ட ராஜேசுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே அவர் வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க செயின், ேமாதிரம், தங்க கடிகாரம் உள்பட 18 பவுனை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மணிகன்ட ராஜேஷ் மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவதை வைத்து ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.

    பெரம்பலூரை சேர்ந்தவர் பிரகாஷ் (38). என்ஜினீயர். இவர் கோவை துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் துடியலூரில் உள்ள வனிக வளாகத்துக்கு சென்றனர்.

    அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீடு திரும்பிய பிரகாஷ் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பிரகாஷ் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று துடியலூரை அடுத்த பாரதி நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (36). தொழிலாளி. சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு செல்வபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    வீடு திரும்பிய அவர் கொள்ளை போயி–ருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஷாஜகான் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

    • அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், டாலர், மோதிரம் உள்பட 44½ பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
    • கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நான்சிகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி சந்திரா (வயது 40). ரியல் எஸ்டேட் அதிபர்.

    கடந்த 10-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான பழனிக்கு சென்றார். அங்கு வைத்து சந்திரா அவரது மகளுக்கு புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நடத்தினார்.

    இந்தநிலையில் 11-ந் தேதி இரவு இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், டாலர், மோதிரம் உள்பட 44½ பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சந்திராவுக்கு தகவல் தெரி வித்தார். அவர் உடனடியாக தனது வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து வடக்கிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 44½ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். 

    ×