செய்திகள்
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 10 கோடி நிதி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #fanistorm #edapapdipalanisamy
சென்னை:
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு தமிழகம் சார்பில் ரூ. 10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், பானி புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் அறிவித்துள்ளார். #fanistorm #edapapdipalanisamy