செய்திகள்

ஆலத்தூரில் கார் மோதி பெண் பலி

Published On 2019-04-30 07:24 GMT   |   Update On 2019-04-30 07:24 GMT
ஆலத்தூரில் கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்போரூர்:

திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பம்மாள் (வயது 50) இவர் சாலையோரத்தில் காய்கறிகடை வைத்துள்ளார். நேற்று இரவு சுமார் 9 மணியளவில் காய்கறி கடை வியாபாரம் முடிந்து காய்கறிமூட்டைகளை எதிரில் உள்ள ஒரு கடையில் வைப்பதற்காக சாலையை கடக்க முற்பட்டார். அப்போது வேகமாக திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி எறியப்பட்ட குப்பம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் பூஞ்சேரி கூட்ரோட்டில் பிடிபட்டது. இச்சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News