search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் மோதி"

    • எதிர்பாராதவிதமாக பாலசாமி மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி இன்று காலை பாலசாமி உயிரிழந்தார்.

    தக்கலை:

    தேவிகோடு செறுவ ல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசாமி (வயது81). இவர் கடந்த 30-ந்தேதி தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலில் நோக்கி கார் விரைந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பாலசாமி மீது மோதியது.

    இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பாலசாமி உயிரிழந்தார்.

    இது சம்பந்தமாக அவரது மகன் பால் வின்சிகர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் கார் டிரைவர் பாபநாசம் பகுதியை சேர்ந்த முத்து சுப்பிரமணியன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலை 4 மணியளவில் கிளாவடிநத்தம் மெயின் ரோட்டை கடக்க முயன்றார்.
    • சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    புவனகிரி அடுத்த கிளாவடிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் கிளாவடிநத்தம் மெயின் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த கார் செல்வராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்த செல்வராஜை. அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிளாவடி நத்தம் மெயின் ரோட்டில் உள்ள தெரு விளக்குகள் எரியாத தால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி சாலை விபத்து கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

    • கந்தசாமி (வயது 60). இவர் சத்தியமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ஆவார். இவரது மனைவி நவமணி (57). இவர் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
    • பரமத்திவேலூர் அனிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.

    பரமத்திவேலூர்:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா, தூக்கநாயக்கன் பாளையம் அருகே உள்ள கள்ளிக்காடு, வழங்கையான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவர் சத்தியமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ஆவார். இவரது மனைவி நவமணி (57). இவர் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் அரசு காரில் நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். பரமத்திவேலூர் அனிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அனிச்சம்பாளையத்தை சேர்ந்த செங்கோட்டையன் மகன் கல்லூரி மாணவர் பிரஜித் (19), நன்செய்இடையாறை சேர்ந்த ராஜேந்திரன் மகனான மெக்கானிக் கண்ணன் (19) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

    இதைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரை அதிக வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுகா, தூக்க நாயக்கன் பாளையத்தை சேர்ந்த டிரைவர் முகேஷ் (25) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் ரோட்டோரம் இருந்த ஒரு புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.
    • 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 3 பேர் காரில் சத்தியமங்கலம் அருகே உள்ள சிங்கிரி பாளையம் என்ற பகுதிக்கு சிகிச்சைக்காக வந்தனர்.

    இன்று காலை 9 மணியளவில் அவர்கள் பண்ணாரி அருகே 1-வது சுற்று அருகே மலைபாதையை விட்டு இறங்கினர்.

    அப்போது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் காரை இயக்கி உள்ளனர். இதில் வேகமாக சென்ற கார் ரோட்டோரம் இருந்த ஒரு புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் காரில் வந்த நாசிர் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார். மற்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதில் ஒருவர் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குபேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • பங்களாப்புதூர் போலீசார் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    கோபிசெட்டிபாளைய த்தை அடுத்த அக்கரை கொடிவேரி இன்னாசியார் வீதியை சேர்ந்தவர் குபேந்திரன் (42). டிரைவர். சம்பவத்தன்று இரவு குபேந்திரன் சத்தியமங்கலத்தில் இருந்து கொடிவேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    சின்னட்டிபாளையம் அருகே வந்த போது கொடிவேரியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குபேந்திரன் தூக்கி வீசப்பட்டு ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பங்களாப்புதூர் போலீசார் குபேந்திரன் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விஜயவாடா பகுதியில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவிலுக்கு வந்தனர்.
    • வாகனத்தில் இருந்து இறங்கி ரோட்டை கடக்க முயன்றார்.

    விழுப்புரம்:

    ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவிலுக்கு சென்று விட்டு 15-க்கும் மேற்பட்டோர் தனியார் சொகுசு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சலவாதி அருகே தனியார் உணவ கத்தில் உணவருந்த வாக னத்தை நிறுத்திய போது ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த குல்லாபுடி சீதா ராமன் (வயது 46), உண வருந்து வதற்க்காக வாக னத்தில் இருந்து இறங்கி ரோட்டை கடக்க முற்பட்ட போது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி அதி வேகமாக வந்த அடை யாளம் தெரியாத கார் குல்லா புடி சீதாராமன் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.

    ரோஷனை போலீசார் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற காரைதேடி வருகின்றனர். குள்ளாபுடி சீதாராமன் மனைவி மற்றும் உறவி னர்கள் கண் எதிரே கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் பலத்த அடிபட்ட சுப்ரமணியத்தை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சிலம்பட்டி, களத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 42). தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் பெருந்துறை செல்வதற்காக பெத்தாம்பாளையம் ரோடு, கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை ரோட்டை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார்.

    அப்பொழுது சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராத விதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த அடிபட்ட சுப்ரமணியத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுப்ரமணியம் இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தங்கராஜ் தனது மனைவியுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
    • நெடுஞ்சாலை ரோட்டை கடந்த போது ஒரு கார் திடீரென இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பெருந்துறை:

    சென்னிமலையை அடு த்துள்ள எக்கட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 61).

    இவர் சம்பவத்தன்று தனது மனைவி தனலட்சுமியுடன் (வயது 55) பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் ரோடு சின்னாத்தாள் கோவிலில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் ரோடு நெடுஞ்சாலை ரோட்டை கடந்த போது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு கார் திடீரென இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த அடிபட்ட 2 பேரையும் அக்கம்பக்க த்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தனலட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

    படுகாயம் அடைந்த தங்கராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கிருஷ்ணமூர்த்தி தனது மகனை கல்லூரிக்கு அனுப்பி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
    • அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 52). இவர் கோவை கோர்ட்டில் குமஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கவுரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது மகனை கல்லூரிக்கு அனுப்பி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அவர் பு.புளியம்பட்டி சத்திய மங்கலம் மெயின் ரோட்டில் வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் கிருஷ்ண மூர்த்தி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இது பற்றி தகவல் கிடை த்ததும் பு.புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    • சேலம்- கோவை பைபாஸ் ரோடு வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
    • இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இட த்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள நசியனூர் கவுண்டன்பாளை யம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்து என்கிற பூரணசாமி (58). இவருக்கு ருக்மணி என்ற மனைவியும், மேனகா, சுதா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    சமையல் வேலை செய்து வரும் முத்து நசியனூர் மாரியம்மன், மதுர காளியம்மன், கருப்பராயன், கன்னிமார் கோவிலில் பூஜை செய்து வந்தார்.

    இவரது தங்கை புஷ்பா (49). இந்த நிலையில் முத்து மற்றும் அவரது தங்கை புஷ்பாவும் மோட்டார் சைக்கிளில் நசியனூர் மேற்கு புதூரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர்.

    அவர்கள் மோட்டார் சைக்கிளில் சேலம்- கோவை பைபாஸ் ரோடு நசியனூர் சாமி கவுண்டன் பாளையம் பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இட த்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் ஆத்தூரை சேர்ந்த சற்குணம் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒரு கார் முருகன் வந்த மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
    • இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 54). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் முருகன் சிறுவலூர்- பெருந்துறை ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர் வந்த மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் முருகன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரி தாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடையாளம் தெரியாத கார் ஒன்று ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்ப்படுத்தியது.
    • இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயத்துடன் ரோட்டில் கிடந்துள்ளார்.

    பவானி:

    ஈரோடு சின்னசோமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (59). தனியாருக்கு சொந்தமான சைசிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ராகுல் என்ற மகனும், கோபிகா என்ற மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ராமசாமி இரவு 8 மணிக்கு வீட்டிலிருந்து கடைக்கு சென்று வருவதாக மனைவியிடம் தெரிவித்து சென்றுள்ளார். இந்நிலையில் சேலம்-கோவை பைபாஸ் ரோடு பவானி அருகிலுள்ள நசி யனூர், ஆட்டையாம்பா ளையம் பிரிவு பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் ஒன்று ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்ப்படுத்தியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயத்துடன் ரோட்டில் கிடந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று ராமசாமியின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே ராமசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக மனைவி பிரியா சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பி ரமணியன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகையன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×