search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car collides with moped"

    • ஒரு கார் முருகன் வந்த மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
    • இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 54). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் முருகன் சிறுவலூர்- பெருந்துறை ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர் வந்த மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் முருகன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரி தாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×